×

மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்; நாங்கள் தான் இரட்டை சின்னத்தில் நிற்போம்..ஓ.பன்னீர்செல்வம் உறுதி..!!

மதுரை: இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்; நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தான் இரட்டை சின்னத்தில் நிற்போம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மதுரையில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவோம். தற்காலிகமாக தான் இரட்டை இலை வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் நாங்களும் இரட்டை இலையை கேட்போம். இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. தொண்டர்கள் எங்கள் பக்கம் உள்ளனர் என்று தெரிவித்தார்.

கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, கூட்டணி குறித்து பேசி வருகிறோம். அதனை உறுதிப்படுத்திய பிறகு முழுமையான விவரங்களை கூறுகிறோம் என்றார். 2 கோடி தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி பொய் சொல்கிறார். அவ்வாறு இல்லை. மேலும் எடப்பாடி பழனிசாமியுடன் கூட்டணி அமைக்க யாரும் விரும்பவில்லை என அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழுவை ஓ.பன்னீர்செல்வம் கிண்டல் செய்தார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பத்தாண்டு காலம் சிறப்பான ஆட்சி செய்துள்ளார். மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக அரியணை ஏறுவர் எனவும் செய்தியாளர்களிடம் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

The post மக்களவைத் தேர்தலில் இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்; நாங்கள் தான் இரட்டை சின்னத்தில் நிற்போம்..ஓ.பன்னீர்செல்வம் உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Paneer Selvam ,Madurai ,Chief Minister ,O. Paneer Selvam ,Madura ,People's Elections ,
× RELATED கோவை முன்னாள் மேயரும், 2 முறை...